இந்நிலையில் இன்று துவங்கும் இலக்கிய விழாவிலும் குறிப்பிட்டபடி அவர் கலந்துகொள்வார் என்று விழா அமைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.ஆனால் , ஜெய்ப்பூர் இலக்கியம் விழாவில் கலந்து கொள்ள எதிர்ப்பு அதிகமானதை அடுத்து சல்மான் ருஷ்டி தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி விழா அமைப்பாளர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.அதில் விழாவில் கலந்துகொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக ருஷ்டி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என விழா அமைப்பாளர்கள் கூறியுள்ளனர் .
முன்னதாக ஒரு இஸ்லாமிய இயக்கம் இந்தியாவிற்கு வரும் ருஷ்டியை செருப்பால் அடிப்பவருக்கு ஒரு லட்சம் ருபாய் பரிசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக