
இது பற்றி போலீசாருக்கு புகார்கள் சென்றன.திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் ஜோஸ், ஆசிரமத்தை கண்காணிக்கும் படி உதவி போலீஸ் கமிஷனர் மோகன் தலைமையில் தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் ஸ்ரீபிரசாத், மண்டுதாஸ் ஆகியோரின் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினர்.
நேற்று மாலை அவர்கள் நடத்தி வந்த ஆசிரமத்திற்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 1 1/2 கிலோ ஹாசிஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 52 பிளாஸ்டிக் பொட்டலங்களில் மிட்டாய் போன்று பொதிந்து அவற்றை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விற்று இருவரும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சர்வதேச போதை கும்பலுடன் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக