
உருது மொழியில் புகழ்பெற்ற கசல் கவிஞரான இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் பரில்லி மாவட்டத்தில் அஒன்லா நகரில் கடந்த 1936 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதியன்று பிறந்த கான் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தனது உயர் கல்வியை படித்தார்.
இதனையடுத்து பிஹெச். டி. பட்டம் பெற்ற அவர் அதே பல்கலைக்கழகத்தில் 1966 ஆம் வருடம் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு அலிகர் பல்கலைக்கழகத்தின் உருது துறையின் தலைவராக கான் ஓய்வு பெற்றார்.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் இடுகாட்டில் நாளை பிற்பகல் அக்லாக் முஹம்மத் கான் அடக்கம் செய்யப்படுவார் என்று அப்பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக