ஆப்கானிஸ்தானில் வடகிழக்கு மாகாணத்தில் பிரான்ஸ் படைகள் முகாமிட்டுள்ள இடத்தை நோக்கி போராளிகள்
ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் மீது விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்கின. இதில் போராளிகளுடன் 8 குழந்தைகளும் பலியானார்கள். இதற்கு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் ஹர்சாய் கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
நேட்டோ படை தாக்குதலில் அப்பாவிகள் யாரும் பலியாகவில்லை என்று கூட்டுப்படையின் பிரிகேடியர் ஜெனரல் ஜேக்கப்சன் மறுத்தார். கடந்த பிப்ரவரி 8-ந்தேதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 குழந்தைகள் பலியான தகவல் தாமதமாக இப்போதுதான் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹாசாய் ஒவ்வொரு முறையும் நேட்டோ படைகளின் தாக்குதலை கண்டித்து வந்தாலும் அந்த நாடுகளுடனான நெருங்கிய நட்பு தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக