திங்கள், ஜனவரி 23, 2012

மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து விபத்து:28 பள்ளிக் குழந்தைகள் காயம் !

மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து விபத்து:28 பள்ளிக் குழந்தைகள் காயம்மத்திய பிரதேச மாநிலம் லசுதியா, ரோஸ்லா, பெர்கா கிராமங்களை சேர்ந்த 28 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்ற பள்ளிப் பேருந்து ஷாஜாபுரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கலபிபால் என்ற இடத்தில் வளைவில் திரும்பும்போது தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த குழந்தைகள் அனைவரும் படுகாயமடைந்தனர். அவர்களில் 23 பேர் கலபிபால் அரசு மருத்துவமனையிலும், மீதி 5 பேர் அருகிலுள்ள ஷுஜால்பூர் நகர மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், இந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுனரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக