
அவர் கூறியது: பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நடந்த வேளையில் நான் அமைச்சராக இல்லை. இருந்தபோதிலும் இதனை சோனியா காந்தியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். புகைப்படங்களை பார்த்தவுடன் சோனியா காந்தியின் கண்கள் குளமாகின. இவ்விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல சோனியா உத்தரவிட்டார். இந்த என்கவுண்டர் குறித்து நீதி விசாரணை நடத்துவதற்கான கட்டம் வரை உருவானது. ஆனால், மக்களவை தேர்தல் நடக்கும் வேளை என்பதால் நீதிமன்றத்திற்கு இவ்விவகாரம் சென்றுவிட்டது’ என குர்ஷித் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவின் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய சில மணிநேரங்களே உள்ள நிலையில் கூறினார்.
2008 செப்டம்பர் 19-ஆம் தேதி டெல்லி பாட்லா ஹவுஸில் நடந்த போலி என்கவுண்டரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்திர சர்மாவும், ஜாமிஆ மில்லியாவின் இரண்டு மாணவர்களும் கொல்லப்பட்டனர்.
ஆனால், குர்ஷித்தின் பேச்சுக்கு திக் விஜய் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.”சோனியா காந்தி அழவில்லை. அது சல்மான் குர்ஷித்தின் சொந்த கருத்து” என திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக