
இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 118 ஆகிய பிரிவுகளின்படி குற்றகரமான சதித்திட்டம், குற்றம் குறித்தும் அறிந்து அதனை தடுக்காமலிருந்தது ஆகிய குற்றங்கள் ஜெயராஜன் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஜெயராஜன் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூ. தொண்டர்கள் போலீஸ் வாகனத்தின் மீது கல் வீசித் தாக்கினர். இவ்வழக்கில் நேற்று முன்தினம் விசாரணை செய்த டி.வி.ராஜேஷ் எம்.எல்.ஏவின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து பி.ஜெயராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயராஜன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்ணூர் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமலிருக்க தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பி.ஜெயராஜனின் கைதை கண்டித்து நாளை(வியாழக்கிழமை) சி.பி.எம் கட்சி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக