
இதுகுறித்து நேற்று தகவல் அறிந்த சிவன் கோயில் நிர்வாக அதிகாரி கஸ்தூரி (பொறுப்பு), செயற்பொறியாளர் ராமிரெட்டி, ஆணையர் அஜய் கிஷோர், தாசில்தார் வீராசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கடந்த 1885ம் ஆண்டு ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் ஆட்சி செய்த மன்னர் தாமர்லாவுக்கு சொந்தமான கண்ணாடி மாளிகை சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்ததாகவும், அதில்தான் மன்னரின் குடும்பத்தினர் தங்கி இருந்ததாகவும் கூறுகின்றனர். மேலும் தாமர்லாவின் ஆட்சிக்கு பின்பு அவரது வம்சாவளியை சேர்ந்த மஹிபால் நாயனி என்பவர் அந்த கண்ணாடி மாளிகையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1930ம் ஆண்டு மஹிபால் நாயனி, ஸ்ரீகாளஹஸ்தி பகுதியை ஆள பட்டாபிஷேகம் செய்யப்பட்டுள்ளார். வரலாற்று சான்றுகள்படி ஸ்ரீகாளஹஸ்தி பகுதியை ஆண்ட கடைசி மன்னன் மஹிபால் நாயனி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னர் மஹிபால் நாயனிக்கு பின்பு அவரது வம்சாவளியை சேர்ந்தவர்கள் அங்கு வசித்துள்ளனர். இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் மன்னரின் வம்சத்தார் தனி நபருக்கு அந்த இடத்தை விற்றுவிட்டு வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். பின்னர் பராமரிக்காமல் விடப்பட்ட மாளிகை, மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கண்ணாடி மாளிகை, சுரங்கப் பாதை குறித்து தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு பிறகே உண்மை நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக