வெள்ளி, ஆகஸ்ட் 02, 2013

பழங்குடியின பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்! -அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பழங்குடியின பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வதாக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் காந்திலால் துரியா குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில் தலித் கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அதிகமாக இளம்பெண்களை கடத்திச் செல்வதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பழங்குடியின தலைவருமான துரியா கூறுகிறார்.

போபாலில் காங்கிரஸ் கட்சியின் பழங்குடியின பிரவு சார்பாக நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார் துரியா. உணவு உள்ளிட்ட ஆசை வார்த்தைகளை கூறி ஒவ்வொரு வீடுகளுக்கும் வருகின்றனர். இளம்பெண்களை குறிவைக்கும் இவர்களை கிராமங்களில் நுழையவிடக் கூடாது என்று துரியா மக்களிடம் கூறினார். போலீஸ் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்வதில்லை. பா.ஜ.க அரசு சங்க்பரிவார குற்றவாளிகளை பாதுகாக்கிறது என்று துரியா மேலும் தெரிவித்துள்ளார். துரியாவின் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்த வழக்கறிஞர் ராஜேந்திர பாபட் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

செய்தி: தேஜஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக