சனி, ஆகஸ்ட் 24, 2013

மோடியை அரசு அழைக்கவில்லை! -பிரிட்டன் தூதர்!

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி பிரிட்டனுக்கு அரசு விருந்தினராக அழைக்கப்படவில்லை என பிரிட்டனுக்கான இந்திய தூதர் ஜேம்ஸ் பெவன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தாம் கடந்த ஆண்டு நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்த ஜேம்ஸ் பெவன், குஜராத் கலவரத்தில் பலியான 3 பிரிட்டன் குடிமக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் வகையிலேயே நரேந்திர மோடியை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு பின், மோடியுடனான உறவில் இங்கிலந்து அரசு இடைவெளி ஏற்படுத்திக் கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக