திங்கள், ஆகஸ்ட் 19, 2013

"தீவிரவாதி என்று நிரூபிக்க முடியுமா?" - இந்தியாவுக்கு ஹஃபீஸ் சையத் சவால்!

தன்னை தீவிரவாதி என்று குறிப்பிடும் இந்திய அரசால் அதை நிரூபிக்க முடியுமா? என்று ஜமாஅத்துத் தாவா என்னும் அமைப்பின் தலைவரான ஹஃபீஸ் சையத் சவால் விடுத்துள்ளார்.

லாஹூரில் பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தின விழாவொன்றில் பேசுகையில் அவர் இவ்வாறு பேசினார். "என்னைப் பற்றி தொடர்ந்து தீவிரவாதி என்று நீங்கள் (இந்தியா) சொல்லி வருகிறீர்கள். வேண்டுமானால், இந்தியா, பாகிஸ்தானிலுள்ள முன்னணி வழக்கறிஞர்கள், நீதிபதிகளைக் கொண்ட ஒரு சட்டக் குழுவை அமைத்து அதை நிரூபிக்க முடியுமா என்று பாருங்கள். அப்படி நிரூபித்துவிட்டால் நீங்கள் சொல்வதற்கு நான் கட்டுப்படுகிறேன்" என்றும் அவர் கூறினார்.
காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய இராணுவம் தொடர்ந்து அத்துமீறுவதாகக் கூறி இவ்விழாவில் பேரணியும் நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக