வியாழன், ஆகஸ்ட் 08, 2013

மலேசியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஈகை திருநாள்!

மலேசியா: மலேசியாவில் இன்று (08/08/13) ஈகை திருநாள் கொண்டாடப்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலும்பூர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் காலை சரியாக 9 மணிக்கு தொழுகை நடத்தப்பட்டது. இதில் மலேசியா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, பர்மா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அரேபிய நாட்டை சேர்ந்த பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி அன்பினை பரிமாறிக்கொண்டனர்.

ஆசிய நண்பன் குழுவின் சார்பாக உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக