வியாழன், ஆகஸ்ட் 01, 2013

திமுக பிரமுகர் கொலையில் எட்டுப்பேர் கைது!

திமுக பிரமுகர் இடிமுரசு இளங்கோ என்பவர் இரு நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட வழக்கில், எட்டுப் பேரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் க. இடிமுரசு இளங்கோ (45). திமுகவில் 45-ஆவது வட்டச் செயலராக இருந்த இளங்கோ கட்டட ஒப்பந்தப் பணியையும் செய்து வந்தார்.

கடந்த திங்கட்கிழமை இரவு பெரம்பூர் காகித ஆலை சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே இருசக்கர எந்திர வாகனத்தில் இளங்கோ வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து, வம்பு வளர்த்து வெட்டிப் படுகொலை செய்து விட்டு ஓடியது.
தொடர்பாக, காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திய போது, அதே பகுதியைச் சேர்ந்த நித்யாதரன் (22), கணேஷ் என்ற தில்லி கணேஷ் (23), முருகன் (22), பிரேம்குமார் (32), ராஜ்குமார் (32), சந்தோஷ்குமார் (22) அறிவழகு (22), ராஜகோபால் (22) ஆகியோருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவர்கள் 8 பேரையும் காவல் அதிகாரிகள் கைது செய்தனர்.
முன்பகை காரணமாகவே இக்கொலை நடந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக