திங்கள், ஆகஸ்ட் 19, 2013

மோடியை விமர்சித்தால் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் – ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்!

புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ்  நரேந்திர மோடியை விமர்சனம் செய்யும் பாஜக கட்சிக்காரர்களை 6 ஆண்டுகளுக்கு நீக்கலாம் என்று பாஜகவைக் கேட்டுக்கொண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.


பா.ஜ.க.வின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் தலைவர்களுடன் உரையாடிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சோனி, வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது, நாட்டின் சூழல் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு சாதகமாக இருப்பதாகக் கூறியுள்ள அவர், நாட்டில் இப்போது காங்கிரஸுக்கு எதிரான அலை வீசுவதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பாஜக தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்.

காங்கிரசுக்கு எதிரான மக்களின் கோபம், பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று கட்சியினரிடம் கூறியுள்ளார். அப்போது, உ.பி. மாநில பாஜக தலைவர் லக்ஷ்மிகாந்த் பாஜ்பாயும் உடன் இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக