வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

சிறையிலிருந்து 365 இந்தியர்கள் விடுதலை செய்யும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 365 இந்தியக்கைதிகளை சனிக்கிழமை விடுதலை செய்யப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. கராச்சி மிலிர் மாவட்ட சிறையிலிருந்து 340 மீனவர்களும், பலூசிஸ்தான் கட்டானி சிறையிலிருந்து 25 படகுப்பணியாளர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. 

இவர்கள் அனைவரின் தண்டனைக்காலம் முடிவடைந்து விட்டதால், இந்தியாவுடனான ஒப்பந்தப்படி வரும் ஞாயிறன்று வாக எல்லை வழியாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இரு நாட்டு உள்துறை, வெளியுறவு துறை மற்றும் எல்லை மாநில பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இவர்கள் 365 பேரும் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக