
உடனடியாக பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் மீண்டும் ஓடு பாதையில் நிறுத்தப்பட்டது. அதற்குள் தகவல் அறிந்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஓடு பாதைக்கு விரைந்து வந்து, கீழே குதித்த பயணியை சுற்றி வளைத்தனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
அவருக்கு 24 வயதிருக்கும். உடனடியாக அவரை மிரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின், ஒரு மணி நேரம் தாமதத்துக்கு பின், விமானம் கோலாலம்பூர் புறப்பட்டது. விமானத்தில் இருந்து குதித்தது குறித்து வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை பற்றி பெயர் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக