புதன், ஜனவரி 29, 2014

வேட்பாளர் செலவுத்தொகை உச்சவரம்பு உயருகிறது; தேர்தல் கமிஷன் முடிவு



















பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர் செலவுத்தொகை உச்சவரம்பு, கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, இந்த உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு வேண்டுகோள் விடுத்தன.

ஆம் ஆத்மி எங்களுக்கு பணம் குறித்தான தகவலை தரவில்லை; கோர்ட்டில் மத்திய அரசு பதில்



புதுடெல்லி,
புதுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது 20 கோடி நன்கொடை பெற்றதாகவும், மேலும் பணம் தேவையில்லை என்றும் அறிவித்ததாக தகவல் வெளியாகியது. இதனை அடுத்து ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி மறுத்தது. மேலும், அரசியல் பலிவாங்கும் நடவடிக்கையாக இவ்வாறு புகார் எழுப்பப்படுகிறது என்று குற்றம் சாட்டியது.

டெல்லி மேல்-சபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது; தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு ஆகிறார்கள்: அ.தி.மு.க - 4, தி.மு.க - 1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 1



சென்னை,
டெல்லி மேல்–சபையில் தமிழகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்களின் (ராஜ்ய சபா எம்.பி.) பதவிக்காலம் ஏப்ரல் மாதம் நிறைவு பெறுகிறது.
அந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் பிப்ரவரி 7–ந்தேதி நடைபெறும் என்று மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது.
டெல்லி மேல்–சபை எம்.பி.க்களை மாநில சட்டசபை உறுப்பினர்கள் ஒட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். இதன்படி இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக அ.மு.பி.ஜமாலுதீன் (தமிழக சட்டசபை செயலாளர்), தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாக அ.வீரராஜேந்திரன் (சட்டசபை துணைச்செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

”ஆம் ஆத்மியினர் என்னை மிரட்டுகின்றனர்” அரசுக்கு எதிராக பெண்கள் ஆணைய தலைவர் பகீர் புகார்



புதுடெல்லி,
ஆம் ஆத்மியினர் என்னை மிரட்டுகின்றன் என்று டெல்லி அரசுக்கு எதிராக பெண்கள் ஆணைய தலைவர் பர்கா சிங் புகார் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி அரசின் சட்ட மந்திரி சோம்நாத் பார்தி தெற்கு டெல்லியில் ஆப்ரிக்க பெண்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறி நள்ளிரவு தனது ஆதரவாளர்களுடன் அவர்கள் வசிக்கும் பகுதியில் சோதனையில் ஈடுபட்டார்.  அப்போது அவரது ஆதரவாளர்கள் எங்களிடம் மோசமாக நடந்து கொண்டனர் என்று ஆப்பிரிக்க பெண்கள் குற்றம் சாட்டினர்.

புதன், ஜனவரி 22, 2014

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர், ரபெல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்


மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் மற்றும் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். காலிறுதி ஆட்டத்தில் ரபெல் நாடல், பல்கேரிய வீரர் டிமித்ரோவை எதிர்க்கொண்டார். இந்த ஆட்டத்தில் நாடல் 3-6, 7-6 (7-3), 7-6 (9-7), 6–2 என்ற செட் கணக்கில் டிமித்ரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

சிறுசேமிப்பில் முதலீடு உயர்ந்துள்ளதால் கடனிற்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு



புதுடெல்லி
 சிறுசேமிப்பு      திட்டங்களில்                                    பொதுமக்களின் முதலீடுமிகவும் உயர்ந்துள்ளதால், வங்கிகள் வழங்கும் கடனிற்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

டெல்லி மாநில சட்டத்துறை மந்திரி சோம்நாத் பார்திக்கு எதிராக பாரதீய ஜனதா போராட்டம்


புதுடெல்லி,
மாநில அரசுக்கும், போலீஸ் துறைக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக தகவல் வந்தது. அந்த வீட்டில் சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி, டெல்லி மாநில சட்டத்துறை மந்திரி சோம்நாத் பார்தி போலீசாருக்கு உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்க போலீசார் மறுத்துவிட்டனர். சோம்நாத் பார்தி அப்பகுதியில் நள்ளிரவு சோதனை நடத்தினார். அப்போது ஆம் ஆத்மியினர் மோசமாக நடந்து கொண்டதாக உகாண்டா நாட்டு பெண் போலீசில் புகார் அளித்தார்.

சோம்நாத் பார்திக்கு டெல்லி பெண்கள் ஆணையம் சம்மன்; குற்றம் கண்டுபிடிக்கப்பட்டல் நடவடிக்கை ஆம் ஆத்மி


புதுடெல்லி,
டெல்லி மாநில சட்டமந்திரி சோம்நாத் பார்தி டெல்லியில் வெளிநாட்டினர் அதிகமாக வாழும் பகுதியில் சோதனை மேற்கொண்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் உகாண்டா நாட்டு பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உகாண்டா நாட்டு பெண் புகார் கொடுத்துள்ளார்.  உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக புகார் கூறப்பட்டது. சோம்நாத் பார்திக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்திய அரசியலின் ‘குத்தாட்ட நாயகி’ ஆம் ஆத்மி கட்சி பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்


புதுடெல்லி,
டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக்கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு கொளுத்திய பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக  எழுந்த புகார் தொடர்பான பிரச்சனையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் “பைத்தியக்கார முதல்-முந்திரி” உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே தாக்கு


புதுடெல்லி,
டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக் கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு கொளுத்திய பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக  எழுந்த புகார் தொடர்பான பிரச்சனையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

வெள்ளி, ஜனவரி 17, 2014

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது பாரதீய ஜனதா


புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது என்று பாரதீய ஜனதாவின் செய்தி தொடர்பாளர்  பிரகாஷ் ஜவடெகர் தெரிவித்துள்ளார்.மேலும், ஐக்கியமுற்போக்கு கூட்டணி தற்போது செயல்படாத சொத்து ஆகி விட்டது.எனவே தேசிய ஜனநாயக கூட்டணி வரும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள அமெரிக்க பள்ளியை, தூதரகம் இயக்கவில்லை: அமெரிக்கா


வாஷிங்டன்,
டெல்லியில் இயங்கி வரும் அமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்று, விசா மோசடியில் ஈடுபட்டதாகவும், விதிகளை மீறி இயக்கப்படுவதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில், இந்த பள்ளியை அமெரிக்க தூதரகம் இயக்கவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

கறுப்புப்பணம் பதுக்கியோர் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் ஜேத்மலானி வழக்கு


புதுடெல்லி,
அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்கள் பெருமளவு வரி ஏய்ப்பு செய்து, கறுப்புப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகளில் போட்டு வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்தக் கறுப்புப்பணத்தை மீட்டு கொண்டு வர வேண்டும் என்ற குரலும் வலுத்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய முன்னாள் சட்ட மந்திரியும், மூத்த வக்கீலுமான ராம்ஜேத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்காவில் மத சுதந்திரம் பாதுகாக்கப்படும் ஒபாமா உறுதி


வாஷிங்டன்,
அமெரிக்காவில் ஜனவரி 16–ந்தேதி மத சுதந்திர தினமாக கடைப்பிடிக்கப்படும் என ஜனாதிபதி ஒபாமா நேற்று அறிவித்தார்.இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வேலையை காங்கிரஸ் ஒருபோதும் செய்ததில்லை; காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு


புதுடெல்லி,
அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றுவருகிறது.டெல்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பிரதமர் மன்மோகன் சிங்சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கல்நது கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கு, காங்கிரஸ் கட்சியின் பிரசார குழு தலைவர் ஆகிறார், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவு ரத்து


புதுடெல்லி,
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதமர் வேட்பாளர்
தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டு உள்ளார்.மீண்டும் பிரதமராக விரும்பவில்லை என்று மன்மோகன்சிங் கூறிவிட்டதால், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார் முன்நிறுத்தப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், கட்சி எந்த பொறுப்பை வழங்கினாலும், ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

புதன், ஜனவரி 15, 2014

சிறந்த கால்பந்து வீரராகத் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு...

உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்து ஆண்டுதோறும் கால்பந்து சம்மேளனம் கௌரவித்து வருகின்றது. சென்ற ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் லயனல் மெஸ்சி(அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ(போர்சுகல்), பிராங்க் ரிபெரி(பிரான்ஸ்) ஆகியோர் இருந்தனர். இவர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சென்ற ஆண்டின் சிறந்த வீரராக ஏக மனதாக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிங்கப்பூரில் நடந்த கலவரம் குறித்து பொது விசாரணை...

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா என்ற பகுதி இந்தியர்கள் உட்பட பெரும்பான்மையான தெற்காசிய தொழிலாளிகள் வசித்து வரும் இடமாகும். அங்கு கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நடந்த சாலை விபத்து ஒன்றில் ஒரு இந்தியத் தொழிலாளி மரணமடைய நேரிட்டது. இதனால் அந்தப் பகுதியில் வசித்துவந்த 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று திரண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். கடந்த 40 ஆண்டுகளில் அங்கு நடைபெற்றிராத அளவிற்கு பெரிய வன்முறையாக அது மாறியது. இதனைத் தொடர்ந்து 56 இந்தியர்களும், ஒரு வங்காளதேசத்தவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

செவ்வாய், ஜனவரி 07, 2014

அமெரிக்க எதிர்ப்புக்கு பணியாமல் 88 கைதிகளை விடுவிக்க ஆப்கான் தீர்ப்பாயம் உறுதி


காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் பக்ராம் விமானப்படை தளத்தில் 88 பயங்கர கைதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சிறையில் இருந்து விடுவிக்க ஆப்கான் முடிவு செய்துள்ளது. ஆனால், இவர்கள் அபாயகரமானவர்கள், வெளிநாட்டு படையினரை கொன்றதில் இவர்களுக்கு பங்கு உண்டு, இவர்களை தொடர்ந்து சிறைக்காவலில்தான் வைத்திருக்க வேண்டும் என்று கூறி, விடுவிக்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

டெல்லி குடிநீர் வாரியத்தின் 800 அதிகாரிகள் ‘திடீர்’ இடமாற்றம் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை


புதுடெல்லி, –
டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி குடிநீர் வாரிய தலைவராகவும் இருக்கிறார். அவர் பதவி ஏற்ற அன்றே குடிநீர் வாரிய தலைமை செயல் அதிகாரி தேபஸ்ரீ முகர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், குடிநீர் வாரிய பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அதன் அதிகாரிகள் 800–க்கும் மேற்பட்டோரை இடமாற்றம் செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று இரவு அவர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
மேலும், லஞ்சம் வாங்கிய டெல்லி குடிநீர் வாரிய ஊழியர்கள் வினோத் குமார், பட்வாரி சுனில்குமார், அது பிரகாஷ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் லஞ்சம் வாங்குவதை, தனியார் டெலிவிஷன் சேனல் ரகசியமாக படம் பிடித்து அம்பலப்படுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.