வெள்ளி, ஜனவரி 17, 2014

டெல்லியில் உள்ள அமெரிக்க பள்ளியை, தூதரகம் இயக்கவில்லை: அமெரிக்கா


வாஷிங்டன்,
டெல்லியில் இயங்கி வரும் அமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்று, விசா மோசடியில் ஈடுபட்டதாகவும், விதிகளை மீறி இயக்கப்படுவதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில், இந்த பள்ளியை அமெரிக்க தூதரகம் இயக்கவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், இந்திய அரசால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள அந்த பள்ளிக்கூடம், அமெரிக்க தூதரகத்தால் இயக்கப்படுவது அல்ல. மாறாக, அங்கு படிக்கும் அமெரிக்க மாணவர்களின் சொந்த செலவில் இயக்கப்படுகிறது. எனினும் இந்த பிரச்சினை குறித்து இந்தியாவுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தி வருகிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக