செவ்வாய், ஜனவரி 07, 2014

டெல்லி குடிநீர் வாரியத்தின் 800 அதிகாரிகள் ‘திடீர்’ இடமாற்றம் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை


புதுடெல்லி, –
டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி குடிநீர் வாரிய தலைவராகவும் இருக்கிறார். அவர் பதவி ஏற்ற அன்றே குடிநீர் வாரிய தலைமை செயல் அதிகாரி தேபஸ்ரீ முகர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், குடிநீர் வாரிய பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அதன் அதிகாரிகள் 800–க்கும் மேற்பட்டோரை இடமாற்றம் செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று இரவு அவர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
மேலும், லஞ்சம் வாங்கிய டெல்லி குடிநீர் வாரிய ஊழியர்கள் வினோத் குமார், பட்வாரி சுனில்குமார், அது பிரகாஷ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் லஞ்சம் வாங்குவதை, தனியார் டெலிவிஷன் சேனல் ரகசியமாக படம் பிடித்து அம்பலப்படுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக