புதன், ஜனவரி 22, 2014

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர், ரபெல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்


மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் மற்றும் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். காலிறுதி ஆட்டத்தில் ரபெல் நாடல், பல்கேரிய வீரர் டிமித்ரோவை எதிர்க்கொண்டார். இந்த ஆட்டத்தில் நாடல் 3-6, 7-6 (7-3), 7-6 (9-7), 6–2 என்ற செட் கணக்கில் டிமித்ரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக டென்னிஸ் தரவரிசையில் 6வது இடம் வகிக்கும் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், 4 வது இடம் வகிக்கும் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவை எதிர்க்கொண்டார். இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 6-3, 6-4, 6-7(6-9), 6-3 என்ற செட் கணக்கில் முர்ரேவை  வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர், ரபெல் நாடலை எதிர்க்கொள்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக