அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஒரு வருடத்திற்கு முன்பே ஈரான் பேச்சுவார்த்தையை துவக்கியிருந்தது. கடைசியாக 2011 ஜனவரி மாதம் துருக்கியில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது.
மேற்கத்திய நாடுகள் வலுப்படுத்தி வரும் தடை ஈரானை பாதிக்காது என நஜாத் கூறினார். கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியை தொடருகின்றன. எண்ணெய் சந்தையில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வாபஸ் பெற்றாலும் ஈரானை அழித்துவிட முடியாது என நஜாத் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக