காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. பனி காரணமாக மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு பின் விறுவிறுப்பாக நடந்தது. ஒரு சில சம்பவங்களை தவிர தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. பஞ்சாப்பில் 117 தொகுதிகளில் ஆயிரத்து 78 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 1.76 கோடி வாக்காளர்கள் உள்ள பஞ்சாப்பில் 77 சதவீத வாக்குகள் பதிவானது.
உத்தரகண்டில் 70 தொகுதிகளில் 788 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு பா.ஜ - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்குள்ள 63 லட்சம் வாக்காளர்களில் சுமார் 70 சதவீதம் பேர் வாக்களித்ததாக மாநில தேர்தல் அதிகாரி ராதா ரதுரி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக