‘‘புதிய அணை கேரளாவின் கட்டுப்பாட்டில் இருக்கும், தண்ணீர் திறந்து விடுவது குறித்து கேரளாவே முடிவு செய்யும்’’ என்றெல்லாம் சர்வகட்சிக் கூட்டத்திலும், காங்கிரஸ் கட்சிக் கூட்டத்திலும் முடிவெடுத்துவிட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் உம்மன்சாண்டி தன்னிச்சையாகப் பேசிவிட்ட தாக காங்கிரஸ் கட்சிக்குள் முணுமுணுப்புகள் எழுந்தன. இதுதொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ‘‘முதல்வர் ஏன் இப்படிக் கூறினார் என்று தெரியவில்லை. நான் விசாரிக்கிறேன்!’’ என்று பத்திரிகையாளர்களை சமாளித்தார்.
எதிர்ப்பை சமாளிக்க முடியாத உம்மன்சாண்டி, ‘‘புதிய அணையின் கட்டுப்பாட்டை தமிழ்நாட்டிற்கு வழங்க இருப்பதாக நான் பேசவே இல்லை. பத்திரிகைகள்தான் திரித்து எழுதி விட்டார்கள். புதிய அணையின் கட்டுப்பாடு கேரளாவிடம்தான் இருக்கும்!’’ என பல்டி அடித்தார். பிரவம் இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என காங்கிரஸ் நினைப்பதால்தான் முதல்வரே இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதாக சில கேரள பத்திரிகைகளே கிண்டலடித்துள்ளன.
இதற்கிடையில், கடந்த வாரம் முல்லைப்பெரியாறு விவகாரத்துக்காக முழு கடை அடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இடுக்கி தவிர, கேரளாவின் பிற மாவட் டங்களில் இதற்கு ஆதரவு இல்லை. பிரவம் இடைத்தேர்தல் முடிந்த பிறகாவது அணைப் பிரச்னையை கேரள அரசியல் கட்சிகள் விட்டால் சரி என்பதுதான் கேரள மக்களின் மனநிலையாகவும் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக