சனி, பிப்ரவரி 22, 2014

தமிழ்நாட்டில் தொடரும் வெடிகுண்டு கலாச்சாரம் ... இதன் பின்னணி என்ன ?


செஞ்சியை அடுத்த நரசிங்கராயன்பேட்டை அருகே விழுப்புரம் மாவட்ட ‘கியூ’ பிரிவு போலீசார் இன்று வாகன சோதனை நடத்தினர். செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு மினிவேனை போலீசார் வழிமறித்து நிறுத்து சோதனையிட்டனர்.

இதில் 26 அட்டை பெட்டிகளில் சுமார் 625 கிலோ எடையுள்ள பயங்கர சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்கள் வேனில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அந்த டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட மினிவேனும் பறிமுதல் செய்யப்பட்டது.


வேன் டிரைவர் ஜெயவேலு (வயது 32) மற்றும் வேனில் இருந்த ஆரணியை சேர்ந்த டெல்லி ராமு (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். டெட்டனேட்டர் கடத்தலுக்கான காரணம் என்ன? அதன் பின்னணியில் ஏதேனும் சதி திட்டம் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக