புதன், பிப்ரவரி 26, 2014

பிலிப்பைன்ஸ்க்கு வரகூடாது : ஒபாமாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏப்ரல் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா செல்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடக்கிறது. தலைநகர் மணிலாவில் ஆயிரக்காணோர் திரண்டு அமெரிக்க தளங்கள் பிலிப்பைன்ஸ்க்கு வரகூடாது என்று ஆர்ப்பாட்டம் நத்தினர். பின்னர் அவர்கள் மணிலாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். 

 அவர்கள் தூதரகத்திற்குள் நுழைய முயன்றுள்ளனர். 
அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக