திங்கள், பிப்ரவரி 24, 2014

மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் – கேபர் ஓனா!


துருக்கி நாட்டில் பிரயாணம் செய்த ஹங்கேரியிலுள்ள ஜோப்பிகா பகுதியின் ஜனாதிபதி கேபர் வோனா, “மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் மட்டுமே” என இஸ்லாத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஹங்கேரியின் பிரபரல அரசியல்வாதிகளுள் ஒருவர் கேபர் ஓனா. இவர் ஜோப்பிகா பகுதியின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரசுமுறை பயணமாக துருக்கி செல்ல நேர்ந்தது.

இஸ்லாத்தின் மீது வெறுப்பு கொண்டிருந்த ஓனா, துருக்கி செல்வதற்கு விரும்பவில்லை. எனினும் அரசியல் நிர்பந்தம் காரணமாக வேண்டா வெறுப்பாக துருக்கி சென்றார்.

ஆனால், துருக்கி நாட்டையும் அங்குள்ள பல்கலைகழகங்களையும் சுற்றிப் பார்த்த ஓனா அதுவரை தாம் கொண்டிருந்த நிலைப்பாடுகளுக்கு மாற்றமாக பத்திரிகையாளர்களிடம் முஸ்லிம்களைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “நான் துருக்கியுடன் நட்புறவு வைக்கவோ அல்லது பொருளாதார ஒப்பந்தம் செய்யவோ இங்கு வரவில்லை. ஆனால் இங்கு வந்து இங்குள்ள மக்களைப் பார்த்த பிறகு, மேற்குலகம் இவர்களைப் பற்றி கூறிய அனைத்தும் பொய்யாக இருப்பதைக் கண்டுகொண்டேன். இனிமேல் துருக்கி மற்றும் துரானியன் மக்களான அஸர்பைஜானி மக்களை பற்றி மேற்குலகம் அவதூறு பேசுவதை என்னால் ஏற்க முடியாது.

சகோதரத்துவம், குடும்ப அமைப்புகள், பண்பாடு, கலாச்சாரத்தைக் காக்கும் பண்பு, நாட்டுப் பற்று போன்ற பல அம்சங்களை அந்த மக்களிடம் நான் கண்டேன். துருக்கி மக்களை எடுத்துகாட்டாக எடுத்து கொண்டு ஹங்கேரி மக்கள் வாழ வேண்டும் என ஆசைபடுகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

இது மட்டுமன்றி தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ”உலகத்தில் இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆப்ரிக்காவிற்கு இன்றைய காலத்தில் அதிகாரம் இல்லை. ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவின் சூழ்ச்சிகளால் மிகவும் நெருக்கடியான நிலையில் இன்று அந்த மக்கள் தம் அடையாளங்களைத் தொலைத்து வருகிறார்கள்.

நான் கண்டவரை தனது கலாச்சாரத்தை, பண்பாட்டைத் தொலைக்காமல் கையில் ஏந்தி வரும் ஒரே சமூகம் இஸ்லாமிய சமூகம் மட்டும்தான். இனிமேல் எனது வாழ்வை இஸ்லாமின் வழிகாட்டலின் படி வாழும் முஸ்லிம்களைப் போல் அமைத்து கொள்ள ஆசைபடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஓனாவின் இத்திடீர் மாற்றம் ஹங்கேரி அரசியலில் புயலைக் கிளப்பி வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக