தாங்கள் பூர்வீகமாகக் குடியிருந்து வந்த இந்தக் கிராமத்தில் பெரும் பகுதியைக் கடற்படையினர் எடுத்துக் கொண்டது போக மிஞ்சியுள்ள சிறிய நிலப் பகுதியிலேயே தாங்கள் குடியேறி வாழ்ந்து வருகையிலேயே தமது குடியிருப்புக்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக ஊர் முக்கிய பிரமுகரான மஃமூத் தவ்ஃபீக் கூறுகிறார்.
மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவுக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்த திர வவுனியா போலீஸ் உயர் அதிகாரி ஹேமந்த, இந்தச் சம்பவத்தில் 8 வீடுகளும் ஒரு பொது மண்டபமும் எரிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 4 வீடுகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இச்சம்பவத்தில் கடற்படையினருக்கு தொடர்புக் குறித்து சாட்சியங்கள் இல்லை என்று அவர் கூறுகிறார்.
இச்சம்பவத்திற்கு இலங்கை அமைச்சர் ரிஸாத் பதியுத்தீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைச் ஃபாரூக் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக