
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.சுப்பையா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை செயலாளர் எம்.ராஜாராம் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நித்யானந்தாவை 293-வது ஆதீனமாக நியமித்ததில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார். சட்டப் பிரிவு 59-ன் ஒரு ஆதீனத்தை நியமிக்கும் விதிமுறைகளை மதுரை ஆதீனம் பின்பற்றவில்லை. இதனால் இந்த சட்டப் பிரிவின் படி அதாவது ஒரு ஆதீனம் விதிகளை மீறி செயல்பட்டிருந்தால் அந்த அதீனத்தை தலைமை பொறுப்பிலிருந்து நீக்குவது அல்லது அதன் சொத்துகளை கையகப்படுத்துவது என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . எ னவே இது தொடர்பாக ஒரு சிவில் வழக்கு தொடருவதற்கு இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு அக்டோபர் 1-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக