கர்நாடக மாநிலத்திலும் முற்றிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிப்புக்குள்ளானது. பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் முழுவதுமாக ஓடவில்லை.
இதேப்போன்று பீகார், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டதால் பெரும்பாலான கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் ஆட்டோக்கள் முழுவதும் இயக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் பாதியளவு பேருந்துகளே இயக்கப்பட்டன. தமிழகத்தில் லாரிகள் முழுவதும் இயக்கப்படவில்லை. தொழில் நகரமான திருப்பூரில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிறிய கடைகள் முதல் ஹோட்டல்கள், மெக்கானிக் ஷாப்புகள், டீக்கடைகள் என சகல விதமான கடைகளும் பெருமளவில் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் பல பகுதிகளில் சில கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
சென்னையைப் பொறுத்தவரையில் ஐடி நிறுவனங்கள் வழக்கம் போல செயல்பட்டன. இயல்பு நிலை சென்னையில் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதால் ஐடி நிறுவனங்களின் செயல்பாடும் பாதிப்புக்குள்ளாகவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக