புதன், செப்டம்பர் 26, 2012

கோலாகலமாக நடந்த புருனே சுல்தானின் 5வது மகள் திருமணம் !

உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் புருனே சுல்தான். அவருக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர். இவர்களில் 5 வது மகள் ஹபிசாவுக்கு திருமணம் கோலாகலமாக நடந்தது. ஹபிசா மன்னர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கு 32 வயதாகிறது. தன்னைவிட 3 வயது குறைவான முகமது ருசானியை திருமணம் செய்து கொண்டார். முகமது ருசானி பிரதமர் அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் 1700 அறைகள் கொண்ட மன்னர் அரண்மனையில் நடந்தது.
 
பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து மிக விமரிசையாக திருமணத்தை நடத்தினார்கள். திருமண விழாவில் தாய்லாந்து பிரதமர், மலேசிய பிரதமர், கம்போடியா பிரதமர் உள்பட ஏராளமான வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக