கராச்சியில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர். லாகூர், ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் பிரம்மாண்டமான போராட்டங்கள் நடைபெற்றன. ஏராளமான வாகனங்களும், கடைகளும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தீக்கிரையாக்கினர். ஆளுங்கட்சி-எதிர்கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஷ் அஸ்ரஃப் கூட அமைதியாக போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.
போராட்டம் நடந்து வரும் சூழலில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா குடிமக்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதுக் குறித்து அந்நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. போராட்டம் தொடரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்லாமாபாத்தில் உள்ள ஆஸ்திரேலியா தூதரகம் மூடப்பட்டுள்ளது. அமெரிக்க தூதர் ரிச்சார்ட் ஹோக்லாண்டை அழைத்து பாகிஸ்தான் அரசு தனது எதிர்ப்பை தெரிவித்தது. யூ ட்யூபில் இருந்து இறைத்தூதரை அவமதிக்கும் காட்சியை நீக்கம் செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஹோக்லாண்டிடம் பாக். அரசு கோரிக்கை விடுத்தது. இதனை பாக்.வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக