2010-ஆம் ஆண்டு பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதுக்கு அருகே நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு ஆகியவற்றில் ஃபஸீஹ் மஹ்மூதிற்கு பங்கிருப்பதாக இந்திய அரசு குற்றம் சாட்டுகிறது. கடந்த ஒன்பது மாதங்களாக கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியதில் ஃபஸீஹின் பங்கினைக் குறித்து தகவல் கிடைத்ததாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். ஃபஸீஹிற்கு எதிரான வழக்கு விபரங்களையும், கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களையும் சமர்ப்பிக்குமாறு சவூதி அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை கேட்டுள்ளனர்.
ஃபஸீஹை ஒப்படைக்கக் கோரும் இந்திய அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும் முன்னர் குண்டுவெடிப்பு வழக்குகளில் ஃபஸீஹின் பங்கினைக் குறித்து தாங்கள் விசாரிக்கவேண்டும் என்பது சவூதியின் நிலைப்பாடாகும். குண்டுவெடிப்புகளில் ஃபஸீஹின் பங்கினைக் குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளை சவூதி அரேபியா பொருட்படுத்தவில்லை.
இந்தியா-சவூதி பாதுகாப்பு அதிகாரிகளால் கடந்த மே மாதம் 13-ஆம் தேதி தனது கணவர் கைது செய்யப்பட்டார் என்றும், இந்திய அதிகாரிகளின் கஸ்டடியில் அவர் தற்போது உள்ளார் எனவும் குற்றம் சாட்டி ஃபஸீஹின் மனைவி நிகாத் பர்வீன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்திய அரசு நிகாத் பர்வீனின் குற்றச்சாட்டை மறுத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக