இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை, இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை திருச்சி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது;
ராமஜெயம் கடத்தப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் கொல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு சயனைடு விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் இவரது உயிர் பிரிந்து இருக்கிறது. மேலும் அவரது கழுத்தை நெரித்ததற்கான அறிகுறிகளும் அவரது பின்மண்டையில் பலமாக தாக்கியதற்கான அறிகுறிகளும் இருந்தன.
கொலை வழக்கை விசாரிப்பதற்கு பிரேத பரிசோதனை அறிக்கை முக்கிய தடயமாக அமையும் என்பதால், போலீசார் தமது விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக