பின்னர் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த தங்கள் கூட்டாளிகளை விடுவித்தனர். அப்போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மரண தண்டனைக் கைதிகள் 21 பேர் உள்பட மொத்தம் 384 கைதிகள் தப்ப வைக்கப்பட்டனர்.
சிறையை உடைத்துத் தப்பிச் சென்றவர்களை பிடிக்க பாகிஸ்தான் போலீசார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். தப்பிச் சென்ற 384 கைதிகளில் இதுவரை 108 பேர் தாங்களாகவே சிறைக்கு திரும்பியதாகவும், 35 பேர் கைது செய்யப்பட்டதாகவும் மாகாண உள்துறைச் செயலர் ஆசம் கான் தெரிவித்தார். தப்பியோடியவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக