இது குறித்து அன்னா குர்கானில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வலுவான லோக்பால் மசோதா அமலுக்கு வந்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பாதி அமைச்சர்கள் சிறையில் தான் இருப்பார்கள் என்றார். அப்போது பாபா ராம்தேவ் உடன் இருந்தார்.
ஜன் லோக்பால் மசோதாவை அரசியல் கட்சிகள் ஆதரிக்கக் கோரி அன்னா கடந்த மாதம் 25ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக உண்ணாவிரதப் பந்தலில் எம்.பி.க்கள், அரசியல் தலைவர்களைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக அன்னா குழுவினர் சர்ச்சையில் சிக்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக