வியாழன், செப்டம்பர் 15, 2011

"சமூக நீதி மாநாடு" டெல்லியில் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம்

புது டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மற்றுமோர் மைல்கல்லாக வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களுக்கு தேசிய அளவிலான "சமூக நீதி மாநாடு" (SOCIAL JUSTICE CONFERENCE) ஓன்றை நடத்த தீர்மானித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இம்மாநாட்டின் அமர்வுகள் முழுவதும் சமூகத்தின் நீதிக்கான போராட்டம் சம்பந்தமான கலந்தாலோசனைகள், கருத்தங்கங்கள் நடைபெற இருக்கின்றன. இறுதியாக நவம்பர் 27ஆம் தேதி அன்று மாபெரும் பொதுக்கூட்டத்துடன் இந்த மாநாடு நிறைவடையும். இன்ஷா அல்லாஹ் இந்த மாநாட்டிற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிரசித்திப்பெற்ற ராம்லீலா மைதானத்தில் வைத்து இம்மாநாடு நடைபெறவுள்ளது என்பது கூடுதல் தகவலாகும். இம்மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரச்சாரங்கள் நடைபெற உள்ளன.

தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் கூறும்போது இம்மாநாட்டை நடத்துவதற்கான நோக்கம் மக்கள் மத்தியில் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இந்தியாவில் வாழக்கூடிய எல்லாதரப்பு மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை போராடி பெற வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாநாடு நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.
"நீதியின் மூலம் தேசத்தை கட்டி எழுப்புவோம்" என்ற முழக்கத்தை அடிப்படையாக கொண்டு இம்மாநாடு அமையும் என்றார்.
மாநாட்டின் பணிகளை தொடங்குவதற்காக ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு முஹம்மது அலி ஜின்னா அவர்கள் பொது ஒருங்கிணைப்பாளராகவும் , முஹம்மது ஷாஃபி மற்றும் முஹம்மது ரோஷன் ஆகியோர் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கே.எம். ஷரீஃப் அவர்கள் தெரிவித்தார்.
தேசிய தலைவர் ஈ.எம். அப்துர் ரஹ்மான், முஹம்மது ஷஹாபுதீன், முஹம்மது காலித், மெளலானா உஸ்மான் பேக், மெளலானா கலீமுல்லாஹ் ரஷாதி, வழக்கறிஞர் கே.பி. முஹம்மது ஷரீஃப் மற்றும் சிலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக