செவ்வாய், செப்டம்பர் 20, 2011

ஜப்பானில் கடும் சூறாவளிப்புயல்! 13 லட்சம் பேர் வெளியேற்றம்

டோக்கியோ: ஜப்பானில் உள்ள தெற்கு தீவான தேனிகாஷிமாவில் இன்று பயங்கர சூறாவளிப்புயல் உருவாகியுள்ளதாகவும் மேலும் அது நாளை மதியம் டோக்கியோவை தாக்கும் என்று ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பெய்து வரும் கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் 9 வயது சிறுவனும் 84 வயது முதியவர் ஒருவரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டனர் என்று கிஃபூ காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட சூறாவளியினால் பாதிப்பினால் சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூறாவளிப்புயல் அறிவிப்பினை தொடர்ந்து பதிமூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மத்திய ஜப்பானில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி ஜப்பானிய அரசு உத்தரவிட்டுள்ளது நகோவா பகுதியிதிலிருந்து மட்டும் சுமார் 80,000 பேர் உடனடியாக வெளியேற்றப்படுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக