ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறை மறக்க முடியாது - கருணாநிதி!


"மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறுகளை மறந்து விட முடியாது" என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருக்கும் உண்ணாவிரதத்தில் திமுகவுக்கு உடன்பாடு உண்டு என்றாலும் நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறுகளை மறந்து விட முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

2002 ம் ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 3000 க்கும் அதிகமான முஸ்லீம்கள் கொல்லப் பட்ட போது மத்தியில் நடைபெற்ற பாஜக ஆட்சியில் திமுகவும் அங்கம் வகித்தது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக