சனி, மே 14, 2011

அசிமானந்தாவின் அந்தர் பல்டி!

பஞ்சுகுலா (ஹரியானா) : தனக்கும் சம்ஜோதா ரயில் எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கடந்த வியாழக்கிழைமை அன்று நீதிமன்றத்தில் தீடீர் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு சம்ஜோதா ரயிலில் குண்டுவெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 68 அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். இதில் பெரும்பாலும் பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்தவர்கள்.

மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த அசிமானந்தா தான் சிறப்பு புலணாய்வுக்குழுவிடம் தான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக கூறவே இல்லை என்று பல்டி அடித்துள்ளார்.

தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அசிமானந்தா கூறும்போது தன்னை புலணாய்வுக்கு குழு கடுமையான முறையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை நடத்தி தன்னை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாக அவர் கூறினார்.

அசிமானந்தா தொடர்ந்த பெயில் கோரிக்கையை உயர் நிதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு காவலை வருகின்ற மே 26ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
அசிமானந்ததா இந்துத்துவ தீவிரவாத இயக்கமான அபினவ் பாரத்தின் உறுப்பினராவார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டார். இந்த குண்டு வெடிப்பில் 14 அப்பாவி முஸ்லிம்கள் பலியாயினர்.


தேசிய புலணாய்வுக்குழு அசிமானந்தாவிடம் சம்ஜோத்தா குண்டுவெடிப்பு பற்றியும் விசாரணை நடத்தியது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ஆம் தேதி அன்று அசிமானந்தா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக