ஞாயிறு, மார்ச் 09, 2014

விபத்துக்குள்ளான மலேசியா விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணித்த 4 பேர்





விபத்துக்குள்ளாகி வியட்நாம் அருகே கடலில் விழுந்த மலேசிய விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர். அவர்களில் 4 பேர் போலி பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் மரணம்

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் முஹம்மது காசிம் ஃபாஹிம்(57) உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக ஆப்கான் அரசு அறிவித்துள்ளது.

மாதுரி தீட்சித்தின் "குலாப் காங்" படத்திற்கான தடையை நீக்கியது ஐகோர்ட்டு


பெண்கள் உரிமைக்காக போராடிய குலாபி காங் கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மாதுரி தீட்சித்தின் "குலாப் காங்" திரைப்படம் நாளை திரையிடப்படுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி 5–வது முறையாக சாம்பியன்


ஆசிய கிரிக்கெட்
12–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இரண்டு வார காலமாக நடந்து வந்தது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இலங்கை, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணிகள் இறுதிசுற்றுக்கு முன்னேறின.

தீவுகள் பிரச்சினையில் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை கிடையாது சீனா அறிவிப்பு



கிழக்கு சீனா கடல்பகுதி தீவுகள் பிரச்சினையில் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை கிடையாது. ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என சீன மந்திரி உறுதிபட கூறினார்.

சனி, மார்ச் 08, 2014

மலேசிய விமானம் மாயமானது: 239 பயணிகள் கதி என்ன ? சீனா சென்றபோது விபரீதம்


கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட பயணிகள் விமானம் உரிய நேரத்தில் போய்ச்சேராமல் மாயமானது. இதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன ஆனாது என்று தெரியாமல் இருந்தது. இதற்கிடையில் வியட்னாம் விமான சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த விமானம் கடலில் விழுந்ததாக தெரியவந்துள்ளது. கோசு தீவு அருகே இந்த விமானம் விழுந்துள்ளது. இதில் இருந்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வியட்னாம் கடற்படையை சேர்ந்த கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி : தமிழகத்தில் தனித்து மூன்றுதொகுதியில் போட்டி



நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் SDPIகட்சி தனித்து மூன்றுதொகுதியில் போட்டி நெல்லை முபாரக் வட சென்னை நிஜாமுதின் இராமநாதபுரம் நூர்ஜியாவுதின் மாநில பொதுக்குழுவின் இறுதிமுடிவு .

மாணவர்களுக்கு புகை பிடிக்கும் இடைவேளை விடும் இங்கிலாந்து பள்ளி



கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பீட்டர்பரோ பகுதியில் கற்றல் திறன் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கான ஹனிஹில் பள்ளி உள்ளது.

ஜெயலலிதா– மம்தா உருவாக்கும் புதிய அணி....


இடதுசாரி கட்சிகள் விலகியதால் ஜெயலலிதாவும் மம்தா பானர்ஜியும் இணைந்து புதிய அணி உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்று இருந்தன. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கம்யூனிஸ்டு கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன.

பட்டினி போட்டு பெண் கொலை: மலேசிய தம்பதிக்கு தூக்கு தண்டனை



மலேசியாவைச் சேர்ந்தவர் பாங்காங் மெங் (58). இவரது மனைவி தியோக் சிங்க்யென் (56). இவர்களது வீட்டில் இந்தோனேசியாவைச் சேர்ந்த இஸ்தி கொமரியா (26) என்ற பெண் வேலை செய்தார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா போர்க்கப்பல் விரைந்தது: போர் பதட்டம் நீடிப்பு



ரஷிய ராணுவம் முகாமிட்டுள்ளதை தொடர்ந்து உக்ரைனுக்கு அமெரிக்கா போர்க்கப்பல் விரைவதால் போர் பதட்டம் நீடித்துள்ளது.

மாயமான மலேசிய விமானம் கடலில் விழுந்தது: 239 பேர் கதி என்ன?



மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பேருடன் மாயம்!

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் இன்று அதிகாலை மாயமாகியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு எம்.எச்.370 என்ற போயிங் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டு சென்றுள்ளது.

ஆசிய சாம்பியன் : பைனலில் இலங்கை, பாக்., மோதல்

ஆசிய கோப்பை பைனலில் இன்று இலங்கை அணி ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தானை சந்திக்கிறது. வங்கதேசத்தில் ஐந்து நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள், லீக் போட்டியுடன் திரும்பின. இன்று நடக்கும் பைனலில், ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான் அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 90 லட்சம் ஐரோப்பிய பெண்கள்




உலகில் உள்ள பெண்களில், 10 பேரில் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும், அவர்களில் பாதி பேர் தான் புகார் அளிப்பதாகவும், ஐரோப்பிய யூனியன் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதற்காக, 42 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இந்திய மாணவர்களுக்கு பாக., அழைப்பு : இந்தியா ஆட்சேபம்


இந்திய மாணவர்களுக்கு ஆதரவளிப்பதாக பேசிய பாகிஸ்தானிற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கற்களை எறிய வேண்டாம் என தெரிவித்துள்ளது.வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுகிழை இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியை உ.பி., மாநிலம் மீரட் நகரில் உள்ள சுவாமி விவேகானந்த் சுபார்த்தி பல்கலை மாணவர்கள் கண்டு களித்து கொண்டிருந்தனர். இப்பல்கலை கழகத்தில் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.

முன்னாள் மலேசிய பிரதமர் விடுதலை செல்லாது மலேசியா மேல்முறையீடு கோர்ட் தீர்ப்பு


மலேசியாவின் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான  அனவர் இப்ராஹிம் இவர் தனது ஆண் உதவியாளருடன் ஹோமோ செக்ஸ் உறவு வைத்து கொண்டார் என குற்றம்சாட்டபட்டது. மலேசிய சட்டபடி இது கிரிமினல் குற்றமாகும் . இது தொடர்பாக அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என கோர்ட் தீர்ப்பளித்தது இதை எதிர்த்து  அரசு மேல் முறையீடு செய்தது. தற்போது கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வடகொரியா மூத்த ராணுவ அதிகாரி நீக்கமா? புதிய சர்ச்சை பரவுகிறது




வடகொரியா நாட்டு அதிபராக கிம் ஜாங் யூன் பதவி வகிக்கிறார். கடந்த ஆண்டு ராணுவ மூத்த தளபதியாக இருந்த அவரது தாய் மாமா சோங் தாயிக் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதை அடுத்து சோயி ரியாங் ஹா என்பவர் ராணுவ துணை மார்ஷலாக நியமிக்கப்பட்டு அதிபருக்கு அடுத்த இடத்திற்கு உயர்த்தப்பட்டார். இவர் சிறப்பு தூதராக சீனாவுக்கு சென்று திரும்பினார்.

தேர்தல் மைதானத்தில் அரசியல் கட்சிகள்



ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்பவர்களுக்கும், அதைப்பார்ப்பவர்களுக்கும் நன்றாக தெரியும். ஓட்டப்பந்தயம் தொடங்குவதற்கு முன்பு, வீரர்கள் அனைவரும் மைதானத்தில் நிற்பார்கள். ‘ஆன் யுவர் மார்க்’ என்று நடுவர் சொன்னவுடன் பந்தயம் தொடங்குவதற்காக போடப்பட்டிருக்கும் கோட்டின் அருகே நிற்பார்கள். ‘செட்’ என்று சொன்னவுடன் கோட்டின் முன் காலை வைத்து எந்த நேரத்திலும் ஓட தொடங்குவதற்கு துடிதுடிப்புடன் தயாராக இருப்பார்கள். ‘கோ’ என்று நடுவர் சொன்னவுடன், ஓடதொடங்குவார்கள். ‘பினிஷிங் லைன்’ என்று கூறப்படும் பந்தயம் முடிவாகும் இடத்தில் போடப்பட்டுள்ள கோட்டையார் முதலில் தாண்டுகிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

வெள்ளி, மார்ச் 07, 2014

திருப்பதி கோவிலுக்கு பிரிட்டிஷ் கால மன்னர்கள்,முஸ்லிம் மன்னர்கள் வழங்கிய காணிக்கை



திருப்பதி கோவிலுக்குள் பிரிட்டிஷ் கால மன்னர்கள், முஸ்லிம் மன்னர்கள் காணிக்கையாக வழங்கிய பழங்கால நாணயங்கள் பாதுகாக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

6 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவேண்டாம்: நடிகை ரீமா கல்லிங்கல் கருத்து


கேரள கவர்னராக இருந்த நிகில்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கேரளாவின் புதிய கவர்னராக ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டார்.
இவர் வருகிற 10–ந்தேதி கேரளா வருகிறார். 12 அல்லது 13–ந்தேதி கேரள கவர்னராக பொறுப்பேற்க உள்ளார். கேரளாவில் கவர்னர் பதவி வகிக்க ஆர்வமாக இருப்பதாகவும், கேரளாவில் தங்க இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

ஆப்கன் அதிபரின் பெண்குழந்தை இந்திய மருத்துவமனையில் பிறந்தது


கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலை 9.30 மணி அளவில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயின் பெண்குழந்தை இந்தியாவின் குர்கான் பகுதியில் உள்ள போர்டிஸ் மெமோரியல் ஆய்வு மருத்துவமனையில் பிறந்தது. புதன்கிழமையன்று இலங்கைக்கு செல்லும் வழியில் இந்தியா வந்த அதிபர் ஹமீத் கர்சாய் மருத்துவமனைக்குச் சென்று தனது மனைவியையும், மகளையும் பார்த்துவிட்டுச்சென்றார்.

வியாழன், மார்ச் 06, 2014

கைதட்டலுக்கு தேசத் துரோக வழக்கு?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை கைதட்டி வரவேற்ற ஜம்மு காஷ்மீர் மாணவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மீரட் சுவாமி விவேகானந்த் சுபார்தி பல்கலைக் கழகத்தில் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த வாரம் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது.


அம்மாவை விட்டு வரமாட்டேன்… பிறக்கும் போதே கட்டிப்பிடித்து அழுத குழந்தை !

பிரசவ அறையில் பிறக்கும் போதே அம்மாவை கட்டிப்பிடித்து அழுத அதிசய குழந்தையின் வீடியோதான் இன்றைக்கு இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே பிரசவ அறையில் குழந்தை பிறந்த உடன் அதை கழுவி சுத்தம் செய்து பின்னர் தாயிடம் கொடுப்பார்கள் மருத்துவர்கள்.

உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவிற்கு எதிராக 'லைவ்' ஆக வேலையை உதறிய செய்தியாளர்!....

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா டுடே தொலைக்காட்சி செய்தியாளர் தனது வேலையை ராஜினாமா செய்வதாக நேரடி ஒளிபரப்பில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். உக்ரைனின் க்ரைமியா பகுதியில் ரஷ்ய படைகள் புகுந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்ற புதினின் அறிவிப்பு பதற்றத்தை சற்று தணித்துள்ளது.

புதன், மார்ச் 05, 2014

இரையும்,வேட்டைக்காரனும்- அன்ஸாரி,அஷோக் மோச்சி!...

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மாநில முதல்வர் மோடியின் ஒப்புதலோடு சங்பரிவாரம் தலைமையில் நடத்தப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையின் அடையாளமாக உலக மக்களிடையே நீங்கா இடம் பெற்ற இரு புகைப்படங்கள் பிரசித்தமானவை!
ஒன்று, கொலை செய்யும் வெறியுடன் பாய்ந்துவரும் சங்பரிவார பயங்கரவாதிகளிடம் தம்மை விட்டுவிடுமாறு கண்களில் மரண பயத்தோடு கண்ணீருடன் கைகூப்பி கெஞ்சும் தையல் தொழிலாளியான குத்புதீன் அன்ஸாரியின் புகைப்படம்!
மற்றொன்று, முஸ்லிம்களைக் கொன்றொழிக்க கையில் வாள் மற்றும் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷ வெறியுடன் பாயும் செருப்பு தைக்கும் தொழிலாளியான அஷோக் மோச்சியின் புகைப்படம்!

உக்ரைன் விவகாரம்: ஜெர்மனி, இங்கிலாந்துடன் அமெரிக்கா ஆலோசனை....

உக்ரைன் நாட்டில் ரஷிய ராணுவம் குவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பிரதமர்களுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார். உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, ரஷியாவின் அனுதாபியாக இருந்த விக்டர் யானுகோவிச் தூக்கி எறியப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த ரஷியா, உக்ரைனின் கிரீமியா என்ற இடத்தை கைப்பற்றி, அங்கு தனது ராணுவத்தை குவித்தது. 

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்!.....

ஜப்பானில் இன்று அதிகாலை 5:11 மணி அளவில்  கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 என பதிவாகியுள்ளது. ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினா தீவில் பூமிக்கு அடியில் 120 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.  

மகளோட ”ஃபேஸ்புக் ஸ்டேட்டஸால்” போண்டியான அப்பாவின் 80,000 டாலர் $?.....

மகளின் முந்திரிக்கொட்டை பேஸ்புக் ஸ்டேட்டஸால் தந்தை தான் நஷ்ட ஈடாக பெற்ற பணத்தை இழந்த சம்பவம் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. பேட்ரிக் ஸ்னாய் என்பவர் ப்ளோரிடாவின் குல்லிவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர்.அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க பள்ளி நிர்வாகம் மறுத்ததால் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வேலூருக்காக அடம்பிடித்த முஸ்லிம் லீக் - நெல்லையை கொடுத்த திமுக!.....

தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. இந்த கூட்டணியில் பங்கேற்கும்ச்கட்சிக்கு ஒரு ஸீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இம்முறை ஏணி சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

உலகின் துணிச்சல் மிக்க பெண் விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி தேர்வு....


உலகின் துணிச்சல் மிக்க பெண் விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை வாஷிங்டன் மாகாண செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, மார்ச் 02, 2014

யாரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! – பாஜகவின் திமிர் விளக்கம்!


“குஜராத் கலவரத்தையோ அல்லது முன்பு நடைபெற்ற சம்பவங்களையோ குறிப்பிட்டு முஸ்லிம் மக்களிடம் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்கவில்லை” என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

ஸ்ரீநகர் தொகுதியில் பரூக்அப்துல்லாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி போட்டி....



\மத்திய மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக்அப்துல்லாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. ஸ்ரீநகர் தொகுதியில் அவரை எதிர்த்து தகவல் அறியும் ஆர்வலரான முஷாபர் பட் நிற்கிறார். அவர் இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார்.


உதயகுமாருக்கு போராட்டக்குழு கெடு ;போராட்ட களத்தில் இருந்து வருகிற 5–ந்தேதிக்குள் உதயகுமார் வெளியேற வேண்டும்


கூடங்குளம் அணுமின் நிலைய போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அவருடன் போராட்ட குழுவை சேர்ந்த மைபா.ஜேசுராஜும் ஆம் ஆத்மியில் சேர்ந்தார். இருவரும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

ஆப்கானிஸ்தானிடம் தோற்றது அவமானம்: வங்கதேச கேப்டன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்தது. அஸ்கர் 103 பந்தில் 90 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), சமியுல்லா 69 பந்தில் 81 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அரபாத் சன்னி 2 விக்கெட் கைப்பற்றினார்.

அணுகுண்டு பரிசோதனை: 60 ஆண்டுகளாக அமெரிக்க தீவில் கதிர்வீச்சு....


அமெரிக்காவில் மார்ஷல் தீவுகள் உள்ளன. அங்கு பிகினி அடோல் என்ற இடத்தில் கடந்த 1954–ம் ஆண்டு மார்ச் 1–ந்தேதி அமெரிக்கா அணுகுண்டு வீசி சோதனை நடத்தியது.

வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகை மலை போத்துராவுத்தன் பட்டியில் சட்ட விரோதமாக வெடிபொருள்ட்கள் வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர். 

2 1/4 அடி உயர குள்ள மனிதர்

கொலம்பியா நாட்டு தலைநகர் போகோதாவில் எட்வர்டு ஹெர்னான்டஸ்(28) என்ற அதிசய மனிதர் வசிக்கிறார். என்ன விசேஷம் என்றால் இவருடைய உயரம் 2 அடி (27 அங்குலம்) மட்டுமே. குழந்தைகள் அணியக்கூடிய உடைகளே இவருக்கு பொருந்தும். 

அபுதாபி இளவரசரின் சதி அம்பலம்.....


பிப்ரவரி 17 அன்று லிபிய அரசை கவிழ்க்க நடந்த புரட்சி சதியின் பின்னால் அபுதாபி இளவரசரின் பங்கு இருந்ததாக வெளியாகியுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரட்டை நீதியா?,, மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி..


நடிகர் சஞ்சய் தத்துக்கு தொடர்ந்து வழங்கப்படும் பரேல் ஏன்? என மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனது மகள் இறப்புக்கு செல்ல அனுமதி கோரி நகுல் என்பவர் தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்ற நாகபுரி கிளை நீதிமன்றத்தின் நீதிபதிகள் பூஷண் கவாய், அதுல் சந்துர்கர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி 15தொகுதிகளில் போட்டி!,,,

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி 15தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஷாசியா இல்மி தெரிவித்துள்ளார்.

சனி, மார்ச் 01, 2014

கோமா நிலையில் வக்பு வாரியம் : பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மாயம்!


ஒவ்வொரு சமுதாய மக்களும்  தங்களுக்கான சமூக, பொருளாதாரப் பாதுகாப்பிற்கான திட்டங்களை தாங்களே உருவாக்கி, அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பது தான் இன்றைய நடைமுறையாக உள்ளது. அந்தந்த சமுதாயத்தில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கும், படித்தவர்களுக்கும் இது தொடர்பாக பெரும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது.

மார்ச் 2-க்குப் பின்னர் 2.2 மில்லியன் பேர் நீர்ப் பங்கீட்டை எதிர்நோக்குவர்!,,,,


அணைக்கட்டுகளில்  நீரின்  அளவு  குறைந்து  வருவதால்  கிள்ளான்  பள்ளத்தாக்கில்  மேலும்  2.2 மில்லியன்  பேர்  நீர்ப்  பங்கீட்டை  எதிர்நோக்குவர். 

போலீஸ் அதிகாரிகள்மீது விசாரணை என்பது பொய்யான செய்தி!,,,


மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி),  ஊழல்களிலும்  பணத்தைச்  சலவைசெய்யும்  நடவடிக்கையிலும்  ஈடுபட்ட  60  போலீஸ்  அதிகாரிகள்மீது  விசாரணை  நடத்துவதாக  இணைய  செய்தித்தளம்  ஒன்றில்  வெளிவந்த  செய்தியில்  உண்மை  இல்லை  என  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  மறுத்துள்ளார்.

காலிட் இப்ராகிம் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்!

இன்றிரவு பிகேஆர் அடிமட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு விருந்தில் பேசிய சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தினார்.

நிபந்தனையுடன் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டார் தடா.அப்துல் ரஹீம்..!!


பணிந்தது தமிழக அரசு..!!!


கோரிக்கையை பரிசீலிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு..!!

நிபந்தனையுடன் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டார் தடா.அப்துல்

 ரஹீம்..!!



இந்த 5 சீட்டும் கண்டிப்பாக வேண்டும்- பாஜகவிடம் மதிமுக திட்டவட்டம் !,,,


தான் கேட்டுள்ள தொகுதிகளில் குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளை யாருக்காகவும் விட்டுத் தர முடியாது என்று பாஜகவிடம் திட்டவட்டமாக கூறியுள்ளதாம் மதிமுக. இந்த ஐந்து தொகுதிகள் தங்களுக்குக் கண்டிப்பாக வேண்டும் என்றும், இதை சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் மதிமுக கூறியுள்ளதாம். தேமுதிக, பாமக ஆகியவை பாஜக கூட்டணிக்குள் வரும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளதால், அவர்களுக்காக தங்களது தொகுதிகளைக் காவு கொடுக்க மதிமுக தயாரில்லை என்பதையும் பாஜகவிடம் தெளிவுபடுத்தியுள்ளாராம் கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ.

பாஜகவின் தேசிய துணைத் தலைவராக இருந்த கருணா சுக்லா காங்கிரஸில் இணைந்தார்.

புதுடெல்லி: சத்தீஷ்கர் மாநில பாஜக மூத்த தலைவரும், பாஜகவின் தேசிய துணைத் தலைவராகவும் இருந்த கருணா சுக்லா காங்கிரஸில் இணைந்தார்.

ஆம் ஆத்மியில் உதயகுமாரன் - 'எளிய மக்கள் கட்சி' என்ற பெயரில் ஆம் ஆத்மி இயங்கும்!


இடிந்தகரை: ஆம் ஆத்மி கட்சியில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் உள்ளிட்ட சிலர் இணைந்துள்ளனர். இந்தக் கட்சி தமிழகத்தில் எளிய மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கவுள்ளது. இதனை இடிந்தரையில் இன்று செய்தியாளர்களிடையே அறிவித்தார் உதயகுமாரன்.இதுதொடர்பாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை...

தாமிரபரணியிலிருந்து கோக், பெப்சி நிறுவனங்களுக்கு நீர் வழங்கக் கூடாது: எஸ்.டி.பி.ஐ கட்சி


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தாமிரபரணியை மீட்போம், மனிதகுலம் காப்போம்” என்ற முழக்கத்துடன் எஸ்.டி.பி.ஐ  கட்சி தாமிரபரணி பாதுகாப்பு பிரச்சார இயக்கம் ஒன்றினை கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் நெல்லை மற்றும் தூத்துக்குடி  மாவட்டங்களில் நடத்தி வருகிறது.