மௌலானா நசீருதீனை காவல்துறை அழைத்து பேசியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. மேலும் பத்திரிக்கையாளர்கள் அவரின் குடும்பத்தினரை அணுகியுள்ளனர். அவரின் குடும்பத்தினர் பத்திரிக்கைக்கு அளித்துள்ள செய்தியில் நசீருதீனை அழைத்து தற்போதைய சூழ்நிலைக் குறித்து காவல்துறையினர் பேசியுள்ளனர் என்றனர்.
மேலும் காவல்துறை வழக்கம்போல் அப்துல் நயீம் ஜுனைத் மற்றும் முஹம்மத் இம்ரான் என்னும் இரு முஸ்லிம் இளைஞர்களை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றுள்ளது என்றும் அவர்கள் தங்கள் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக