33 வயதான அத்னான் இஸ்ரேலிய ராணுவத்தால் அநியாயமாக கைது செய்யப்பட்டு விசாரணை எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் விடுதலை கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். நாட்கள் செல்ல அத்னானின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரது உயிருக்கு கூட ஆபத்து நேரும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். தனது மகளே தன்னை அடையாளம் காணமுடியாத அளவுக்கு அவரது உடல் நிலை மோசமடைந்தது.
இந்நிலையில் உலகின் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் அவருடைய விடுதலைக்காக குரல் எழுப்பினர். ஃபலஸ்தீனில் அத்னானின் விடுதலையை கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அத்னானின் விடுதலை தொடர்பான மனு இஸ்ரேல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அத்னானின் விடுதலை குறித்து அறிவிப்பு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இம்மனுவை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக