கெஜ்ரிவாலின் இத்தகைய பேச்சு குறித்து காங். பொதுச்செயலாளர் லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறியது:
கெஜ்ரிவால் எத்தகைய அமைப்பு முறையை விரும்புகிறார்? பாராளுமன்றமும், பாராளுமன்ற ஜனநாயகமும் மோசம் என்று கூறும் கெஜ்ரிவால் விரும்புவது ஒரே கட்சி ஆட்சி முறையா?, ஏகாதிபத்திய ஆட்சியா? என்பதை விளக்கவேண்டும். அரசின் உத்தரவுகளை கெஜ்ரிவால் எத்தனை முறை மீறியிருக்கிறார்? பா.ஜ.கவின் பாணியைத்தான் அன்னா ஹஸாரே குழுவினர் கடைப்பிடிக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் பா.ஜ.கவுக்கு எதிராக கருத்தை தெரிவிக்கமாட்டார்கள். காங்கிரஸ் கட்சியைத்தான் ஹாஸாரே குழுவினர் குறிவைத்துள்ளனர். இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக