30 புனித குர்ஆன் பிரதிகள் மற்றும் சமய நூல்கள் அழிக்கப்படாமல் அமெரிக்க அதிகாரிகளால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அஹமட் ஸக்கி கூறினார்.அந்நூல்களில் சில எரிந்திருந்தன, சில நூல்கள் எரிந்திருக்கவில்லை எனவும் மேற்படி நூல்கள் அம்முகாமில் முன்னர் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களால் பயன்படுத்தப்பட்டவை எனவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானிலுள்ள சர்வதேச துருப்புகளின் தளபதியான அமெரிக்க ஜெனரல் ஜோன் அலன் கூறியுள்ளார்.
குர் ஆன் உட்பட பெரும் எண்ணிக்கையான இஸ்லாமிய மத நூல்கள் முறையற்றவிதமாக அழிக்கப்பட்டதாக தமக்கு நேற்றிரவு அறிக்கை கிடைத்தாக அவர் தெரிவித்தார்.இது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மீண்டும் இவ்வாறு நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது (குர் ஆன் எரிப்பு) எந்த வகையிலும் வேண்டுமென்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையல்ல என்று நான் உத்தரவாதப்படுத்துகிறேன், உறுதியளிக்கிறேன்' என அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக