சுக்ராமுக்கு கோமா
ஆனால், முன்னாள் அமைச்சர் சுக்ராம் சரண் அடையவில்லை. அவருக்கு உடல் நலம் சரியில்லை என, அவரது வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனையிலேயே நீதிமன்றக் காவலில் இருக்க அனுமதி கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சுக்ராம் மனு வெள்ளிக்கிழமை, சி.பி.ஐ., நீதிமன்றம் சிறப்பு நீதிபதி சர்மா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுக்ராம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுக்ராம், தற்போது கோமா நிலையில் உள்ளார். அவரால் மருத்துவனையில் இருந்து நகர முடியாது' என்றார்.
ஆம்புலன்சில் வந்தார்
இதையடுத்து, சுக்ராம் சரணடையாவிட்டால் ஜாமீனில் வெளிவரமுடியாது என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இந்த நிலையில் சுக்ராம் இன்று ஆம்புலன்சில் வந்து சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை மூன்றாண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும்,, திகார் சிறையில் அடைக்கவும், பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக