
கைது செய்யப்பட்டவர்களில் கொலைச் செய்யப்பட்ட இளம்பெண்ணின் தந்தையும், சகோதரனும் அடங்குவர்.
மோகா மாவட்டத்தில் ஃபுலேவாலாவைச் சார்ந்த குல்வந்த் கவுரும், அவரது கணவர் ஜகதார் சிங்கும் ராய்க்கோட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டனர். காரில் கடத்தப்பட்ட இவர்களை கொலைச் செய்தபிறகு கால்வாயில் வீசியுள்ளனர். இம்மாதம் 2-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தம்பதியினரை காணவில்லை என கூறி ஜகதாரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து நடத்திய தேடுதலில் இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இளம்ப்பெண்ணின் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் புரிந்த இருவரும் ராய்க்கோட்டில் வசித்து வந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக