
அஸ்ஸாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக கோகோய், புர்ணி கிராமத்திற்கு சென்றிருந்தார். அப்பொழுது கோகோய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் சிலர் மூங்கில் கம்புகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் கோகோய் மீது தாக்கி உள்ளனர். வீடியோ கேமராவையும் கைப்பற்றினர். இதில் காயமடைந்த கோகோய், நல்பாரி ஸ்வாஹித் முகுந்தா ககட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று இச்சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்த கோகோய், குற்றவாளிகளை கைதுச் செய்யும் வரை மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக