வெள்ளி, மார்ச் 16, 2012

வீரம‌ணி‌க்கு ‌நி‌த்யான‌ந்தா சவா‌ல்..!


திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியுடன், நாத்திகமா, ஆத்திகமா என்று விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன் எ‌ன்று ‌நி‌த்யான‌ந்தா சுவா‌மி சவா‌ல் ‌வி‌டு‌த்து‌ள்ளா‌ர்.

சென்னையில் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல் இ‌வ்வாறு கூ‌றிய அவ‌ர், இந்த விவாதம் நட்புரீதியாக இருக்கவேண்டுமே தவிர, சாமி படத்திற்கு செருப்பு மாலை போடுவது என்று எல்லாம் இருக்கக்கூடாது
எ‌ன்றா‌ர்.
ஒருவேளை என்மீது ஒழுக்கக்குறைவு இருந்தால்கூட அதை நாகரிகமான முறையில் வீரமணி எடுத்துச்சொல்லலாம் எ‌ன்று‌ம் ‌நி‌த்யான‌ந்தா கூ‌றினா‌ர்.
ரூ.5 ஆயிரம் கோடி சொத்துடன் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக ‌‌வீரம‌ணி கூறியுள்ளார் எ‌ன்று‌ம் என்னிடம் உள்ள சொத்து ரூ.100 கோடிக்கும் குறைவுதான் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எனது சொத்தை அரசு எடுத்துக்கொள்வதற்கு எந்த உரிமையும் கிடையாது எ‌ன்று‌ம் ‌நி‌‌த்யான‌ந்தா கூ‌றினா‌ர்.
நி‌த்யான‌ந்தாவுட‌ன்தா‌ன் இரு‌க்‌கிறே‌ன்: இதை‌த் தொட‌ர்‌ந்து ‌நி‌த்யான‌ந்தாவுட‌ன் இரு‌ந்த நடிகை ரஞ்சிதா கூறுகை‌யி‌ல், தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்றுகொண்டுதான் இருக்கிறேன் என்றும் தொடர்ந்து நித்யானந்தாவின் சீடராகத்தான் இருக்கிறேன் என்றும் தெ‌ரி‌வி‌த்தா‌ர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக