சனி, ஜூன் 27, 2015

விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் மர்மச்சாவு: ஆம்பூரில் பதட்டம் நீடிப்பு


வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் ஜமில் அகமது(வயது25). இவர் கடந்த 19–ந்தேதி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூ அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கிருந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

ஹாக்கி உலக லீக் அரையிறுதி: இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது

ஹாக்கி உலக லீக் அரையிறுதிப் போட்டி பெல்ஜியத்தில் உள்ள அந்த்வெர்ப் நகரில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி  பாகிஸ்தானை எதிர்கொண்டது. இப்போட்டி 2-2 என சமநிலையில் முடிந்து. இதன்மூலம் இந்தியா ஏ பிரிவில் 7 புள்ளிளுடன் முதல் இடத்தில் உள்ளது.

கே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

தாங்கள் மேற்கொண்ட சோதனையில் கே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது ஆந்திராவை சேர்ந்த அரசு சாரா நிறுவனம்.

செவ்வாய், ஜூன் 23, 2015

கத்தி முனையில் தாயை மடக்கி நகைகளை கொள்ளயடிக்கவந்த கும்பலை திணறடித்த 7 வயது சிறுவனுக்கு வீரதீர விருது

மத்திய இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் பகுதியை சேர்ந்த முஹம்மது அலி என்ற ஏழு வயது சிறுவன் சம்பவத்தன்று தனது வீட்டின் மாடிப்பகுதியில் உள்ள அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நள்ளிரவு நேரத்தில் முன்வாசல் கதவு உடைத்து திறக்கப்படும் ஓசை கேட்டு, கீழே இறங்கி வந்தவன், அந்த காட்சியை கண்டு திடுக்கிட்டான். 

திங்கள், ஜூன் 22, 2015

வாலிபரை சுட்டுக்கொன்ற வழக்கு: கைதான சப்–இன்ஸ்பெக்டர் மதுரை சிறையில் அடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் செய்யது முகம்மது மீது சப்–இன்ஸ்பெக்டர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டார். இதில் செய்யது முகமது அதே இடத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.

சனி, ஜூன் 20, 2015

கடற்கொள்ளையர்கள் கடத்திய மலேசிய எண்ணெய் கப்பல் மீட்பு: கடற்படை அதிரடி நடவடிக்கை

மலேசிய கடற்படை சுற்றி வளைத்ததால் தாங்கள் கடத்திய எண்ணெய் கப்பலை விடுவித்துவிட்டு கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

மலேசிய அரசுக்கு சொந்தமான ‘ஓர்கிம் ஹார்மனி’ என்ற கப்பல் கடந்த 11-ந்தேதி மலேசியாவின் தான்ஜூங் சேதிலி துறைமுகத்தில் இருந்து 50 ஆயிரம் பீப்பாய் எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

வியாழன், ஜூன் 18, 2015

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் பிரேசில்-செர்பியா

20-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தன. முதலாவது அரை இறுதியில் பிரேசில்-செனகல் அணிகள் மோதின.

துருக்கி முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல் மரணம்

துருக்கி நாட்டின் முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல்(90)  மரணம் அடைந்தார்.

தனது 40-வது வயதில் அரசியலுக்குள் நுழைந்த இவர் துருக்கி நீதி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதன், ஜூன் 10, 2015

வியாழன், ஜூன் 04, 2015

இஸ்லாமிய பெண் பயணியிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க விமான நிறுவனம்

இஸ்லாமிய பெண் பயணி ஒருவர் விமானப் பயணத்தின் போது மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. 

அமெரிக்காவில் வசித்து வரும் இஸ்லாமிய பெண் தஹேரா அகமத், கடந்த வாரம் சிகாகோவிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்தார்.

ஓ.பி.எஸ். தம்பி ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் !

பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்துவந்தார் தாழ்த்தப் பட்ட இளைஞர் நாகமுத்து. 

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, இந்த கோவிலை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜாவும் அவரது குடும்பத்தினரும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.  அப்போது நாகமுத்துவை இனிமேல் கோவிலுக்கு வரக்கூடாது என்றும்,   சாதி பெயரைச்சொல்லி திட்டியும்   மிரட்டியும் வந்தனர்.

மசூதி குறித்து சர்ச்சை பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு கைது வாரண்ட்


subbramaniyan sami














கடந்த மார்ச் மாதம் அசாமிலுள்ள கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியசாமி, "'மசூதிகளை எப்போது வேண்டுமானாலும் இடிக்கலாம் அவை மத வழிபாட்டுத் தாலங்கள் இல்லை" என்று பேசியிருந்தார்.

புதன், மே 27, 2015

காவல் மற்றும் தீயணைப்பு துறைக்கு கட்டப்பட்ட கட்டிடங்கள்; ஜெ., திறந்து வைத்தார்

காவல் மற்றும் தீயணைப்புத்துறைக்கு ரூ.444 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.  இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் தரை மற்றும் 3 தளங்களுடன் 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 226 காவல் துறை குடியிருப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலமாகத் திறந்துவைத்தார். 

ஞாயிறு, மே 24, 2015

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது: இளங்கோவன் பேட்டி

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறியுள்ளார். 

வெளிநாட்டு இந்தியர்கள் பற்றி சர்ச்சை பேச்சு: பிரதமர் மோடி மீது சமூக ஆர்வலர் வழக்கு

பிரதமர் மோடி தென் கொரியாவில் சுற்றுப்பயணம் செய்த போது சியோலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது இந்தியாவின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டு பேசும் போது, முன்பு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் பிறந்ததற்காக வருத்தப்பட்டனர்.

திங்கள், மே 18, 2015

முஹம்மது முர்ஸிக்கும், யூசுஃப் அல் கர்ளாவிக்கும் மரண தண்டனை!

சதிப் புரட்சியின் மூலம் நீக்கம் செய்யப்பட்ட எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸிக்கு எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
முஹம்மது முர்ஸி மற்றும் 105 இஃக்வானுல் முஸ்லிமீன் தலைவர்களுக்கான தண்டனை தீர்ப்பை கெய்ரோ குற்றவியல் நீதிமன்றம் முஃப்தியிடம் ஒப்படைத்துள்ளது.

சனி, மே 16, 2015

மோடி அரசின் மோசமான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தடை செய்யப்பட்ட குழந்தை உழைப்புக்குக் கதவைத் திறப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மோடி அரசின் மோசமான நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வெள்ளி, மே 15, 2015

இந்தியாவின் வரைபடத்தை சீன தொலைக்காட்சி தவறாக வெளியிட்டதால் சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் வரைபடத்தை சீனாவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தவறாக வெளியிட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டறிக்கை, நிதி அறிக்கை தாக்கல் மற்றும் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் தேசிய பொதுக் குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகியன நடைபெற்றன.

திங்கள், மே 11, 2015

இன்று தேர்தல் நடத்தினாலும் டெல்லியில் ஆம் ஆத்மி அமோக வெற்றிபெறும்: கெஜ்ரிவால்

டெல்லி அரசை விமர்சித்து தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு எதிராக முதன்மை செயலாளரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். பின்னர் வழக்கு தொடர வேண்டும் என்று மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.