இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான ஆச்சாரி, தன்னைக் கொல்ல யாரோ ஒருவர் முயற்சி செய்வதாகவும், தன்னைப் பின்தொடருவதாகவும் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கதறி அழுதபடி கூறினார்.
தன்னை மிரட்டிய நபர் நீதிமன்றத்தில் இருந்து சற்றுமுன்னர்தான் வெளியேறியதாகவும் அவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் கூறிய நபரை டெல்லி போலீசார் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே பிடித்து நீதிபதி சைனி முன்பு ஆஜர்படுத்தினர்.
அவர் பெயர் ஜெய்ப்ரகாஷ் என அடையாளம் காணப்பட்டது. எனினும் தனக்கு ஆச்சாரியை தெரியாது என்றும், தான் அப்பாவி என்றும் அவர் கூறினார்.
எனினும் சில தினங்களுக்கு முன் தனது வீட்டிற்குள் நுழைய முயற்சித்தவர் ஜெய்ப்ரகாஷ்தான் என தனது பாதுகாவலர் அடையாளம் காட்டியுள்ளார் என ஆச்சாரி கூறினார்.
ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே.சந்தோலியாவுடன் ஜெய்ப்ரகாஷ் இன்று காலை நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார் என்றும் நீதிபதியிடம் ஆச்சாரி கூறினா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக